நடிகை அலியா பட் குறை பிரசவத்தில் குழந்தை பெற்றாரா?: நடிகர் கேஆர்கே பதிவால் பாலிவுட்டில் சலசலப்பு

மும்பை: காதலர்களான பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை அலியா பட் ஆகியோர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், நடிகை அலியா பட்டிற்கு நேற்று மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. திருமணமான 7 மாதத்தில் அலியா பட் குழந்தை பெற்றதால், பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே அலியா பட் கர்ப்பமாக இருந்ததாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் கமல் ஆர் கான் (கேஆர்கே) வெளியிட்ட பதிவில், ‘ஏழு மாதங்களில் அழகான மகளுக்கு பெற்றோரான ரன்பீர் கபூர் - அலியா பட் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து டுவிட்டரில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர், ‘உங்களது பெற்றோரைப் போன்று அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்’ என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த கேஆர்கே, ‘சில முட்டாள்கள் எதற்காக இப்படி பதிவிடுகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. லட்சக்கணக்கான குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றனர். இது சாதாரணமான ஒன்றுதான்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், ‘திருமணத்தின் போதே அலியா பட் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்’ என்று கூறியுள்ளார். அலியா பட் ஏழு மாதத்தில் குழந்தை பெற்றது பாலிவுட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Related Stories: