புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கோரப்பட்டது. நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘மனுதாரர் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கையின் பிடியில் இருந்த 68 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்,’ என தெரிவித்தார்.