புதுடெல்லி:‘இந்திய தேர்தல்களில் வெளிநாடுகளில் வாழும் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் வாக்களிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்,’என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், புலம் பெயர்ந்த இந்தியர்களும் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரும் பிரதான வழக்கும், தமிழக வழக்கறிஞர் ஹரீஷ் குமார் தொடர்ந்த இடைக்கால வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் 1950ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் ஒப்புக் கொண்டுள்ளன.