பெரு: ஹாலோவீன் திகில் தினத்தை முன்னிட்டு பெருவில் நடத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்களுக்கு நடத்தப்பட்ட மாறுவேட போட்டியில் ஏராளமான நாய்களும், பூனைகளும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஹாலோவீன் தினம் ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு பெருவின் லிமா நகரத்தில் செல்லப் பிராணிகளுக்கான ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட நாய்கள், பூனைகள் கலந்து கொண்டன.