சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் (வயது 81) உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘சரத்பவார் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நாளை மறுதினம் தொடங்க உள்ள 2 நாள் கட்சி கூட்டத்தில் திட்டமிட்டபடி அவர் பங்கேற்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத்பவாருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் பித்தப்பை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: