திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நாக சதுர்த்தியையொட்டி மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணா அவதாரத்தில் பலராமனாகவும், வைகுண்டத்தில் மகா விஷ்ணுவிற்கு ஆதிசேஷன் படுக்கையாக விளங்கி வருகிறார். ஆதிசேஷன் தனது பிரியமான பக்தர் என்பதால் ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.