அவுரங்காபாத்: பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகன்ஜ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை சாத் பூஜைக்காக சிலர் பிரசாதம் தயார் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு பிரசாதம் செய்து கொண்டிருந்தவர்கள் கவனித்ததும், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால், அதற்குள் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்தது.