பீகாரில் பிரசாதம் தயாரித்தபோது சிலிண்டர் வெடித்து 25 பேர் படுகாயம்: 5 பேர் கவலைக்கிடம்

அவுரங்காபாத்: பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகன்ஜ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை சாத் பூஜைக்காக சிலர் பிரசாதம் தயார் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு பிரசாதம் செய்து கொண்டிருந்தவர்கள் கவனித்ததும், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால், அதற்குள் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். தீ அணைக்கப்பட்டு காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டனர். தீயை அணைக்க முயன்றபோது பெண் காவலர் உட்பட 5 போலீசார் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில், 5 பேரில் கவலைக்கிடமாக உள்ளார்.

Related Stories: