திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர்கள் இம்தியாஸ்(29), ரிஸ்வான் அகமது(28), சாஜித் அகமது(30). கடந்த 2018ல் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் நடந்த பாஜ பிரமுகர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் இவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அப்போது என்ஐஏ அதிகாரிகள் இவர்களது வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் முத்துப்பேட்டையை சேர்ந்த அசாருதீனுக்கு, அரபு நாடுகளில் உள்ள அன்சுருல்லா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2019ல் அவரது வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.