வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு முதலாவது நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம்  2வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 2வது நிலையின் 1வது அலகிலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் கொதிகலன் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: