புதுடெல்லி: வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் ஆன்லைனில் படித்து பெறும் டாக்டர் பட்டம் செல்லாது என்று யுஜிசி, ஏஐசிடிஇ தெரிவித்துள்ளன. தொலைதூர கல்வி, ஆன்லைன் மூலம் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறலாம் என்ற விளம்பரங்களை பார்த்து மாணவர்கள், மக்கள் ஏமாற வேண்டாம் என ஒன்றிய அரசு ஏற்கனவே இந்தாண்டு தொடக்கத்தில் எச்சரித்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பெறும் பல்கலைக் கழக முனைவர் பட்டம் செல்லாது என்று பல்கலை மானியக்குழுவும், ஏஐசிடிஇ.யும் அறிவித்துள்ளன.