மதுரை: மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி பற்றி அவதூறு வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. வேடசந்தூரைச் சேர்ந்த மரிய செல்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்பதால் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவிட்டது.