பிஜ்னூர்: உத்தரபிரதேச மாநிலம் நஜிபாபாத் அடுத்த செவரம் மொஹல்லா பகுதியை சேர்ந்த போதை பொருள் வியாபாரி சஞ்சீவ் குமார் என்பவரை அரியானா மாநிலம் பஞ்ச்குலா போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் பஞ்ச்குலாவில் போலீஸ் காவலில் இருந்த போது, சஞ்சீவ் குமார் மர்மான முறையில் இறந்தார். இதுகுறித்து பிஜ்னூர் போலீஸ் கஜேந்திர சிங் கூறுகையில், ‘அரியானா போலீசார் சஞ்சீவ் குமாரை பஞ்ச்குலா அழைத்து சென்றனர். பிஜ்னூரில் உள்ள ஓட்டலில் அவரை தங்க வைத்தனர்.