மும்பை: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீதான அதிருப்தியில் அவரது அணியில் இருக்கும் 22 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய உள்ளதாக சிவசேனா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையில், ‘ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இருக்கும் 40 சிவசேனா எம்எல்ஏக்களில் 22 பேர் விரைவில் பாஜகவில் சேரவுள்ளனர். அவர்கள் ஏக்நாத் ஷிண்டே மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவியானது, பாஜகவின் தற்காலிக ஏற்பாடு ஆகும்.