பசுமைவழி-டிஜிஎஸ்.தினகரன் சாலையில் நாளை முதல் ஒருவாரம் போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ ரயில் பணியால் நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பசுமைவழிச் சாலை - டி.ஜி.எஸ். தினகரன் சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரெயில் 2வது கட்ட பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் ஒருவார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், ஆர்.கே.மடம் சாலை - மந்தைவெளி சந்திப்பில் இருந்து பிராடிஸ் கேசில் சாலை வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.  மந்தைவெளியில் இருந்து வாகனங்கள் ஆர்.கே.மடச் சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

பிராடிஸ் கேசில் சாலையில் இருந்து ஆர்.கே. மடச் சாலை நோக்கி செல்லலாம். அடையாறிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திருப்பி விடப்பட்டு டி.ஜி.எஸ் தினகரன் சாலை வழியாக திருப்பிவிடப்படும். மந்தைவெளி மற்றும் மயிலாப்பூர் செல்லும் வாகனங்கள் பிராடிஸ் கேசில் சாலை, ஆர்.கே. மடச் சாலை வழியாக செல்லலாம். சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் நேராக செல்லலாம். மயிலாப்பூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மந்தைவெளி சந்திப்பில் இடதுபுறமாக திருப்பி விடப்பட்டு சவுத் கெனால் பேங்க் சாலை வழியாக சென்று சவுத் கெனால் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி டி.ஜி.எஸ்.தினகரன் சாலையை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: