ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் தைல மரக்கட்டில் காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி கண்ணகி (50). இவரும் தெற்கு தெருவை சேர்ந்த கலைமணி மனைவி மலர்விழியும் (29) ஆகிய இருவரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைலமரக்காட்டில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டில் முளைத்த காளான்களை பறிக்க நேற்று காலை 8 மணியளவில் சைக்கிளில் சென்றனர். சைக்கிளை ரோட்டில் நிறுத்திவிட்டு தைலமரக்காட்டில் யாரும் இல்லாத இடத்தில் காளான்களை பறிக்க சென்றுள்ளனர்.