சென்னை: கட்சியின் நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டத்தை இரண்டாக பிரித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காகவும்- கட்சி பணிகள் செம்மையாக நடைபெறவும், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒன்றிய, நகர கழகங்கள் பின்வருமாறு அமையும். தென்காசி வடக்கு மாவட்டம்- சங்கரன் கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளை அடங்கியதாக அமையும். இதில் சங்கரன்கோவில் (3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலிதநல்லூர் கிழக்கு, மேலநீலிதநல்லூர் மேற்கு, மேலநீலிதநல்லூர் தெற்கு, குருவிகுளம் மேற்கு, குருவிகுளம் தெற்கு, குருவிகுளம் கிழக்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் சங்கரன்கோவில் நகரம், வாசுதேவநல்லூர் வடக்கு, வாசுதேவநல்லூர் தெற்கு, சங்்கரன்கோவில் வடக்கு, சங்கரன்கோவில் தெற்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் புளியங்குடி நகரம் ஆகிய ஒன்றியம், நகரங்கள் அடங்கியதாக இருக்கும்.