ஜெ. மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்: ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோவை செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூடு பற்றி தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பழனிசாமி பொய் கூறியுள்ளார் என தெரிவித்தார்.

Related Stories: