புதுடெல்லி: தேர்தல் குழுவின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டுகிறார் என சசி தரூரை காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் சாடியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் கார்கே வெற்றி பெற்றார். சசிதரூர் காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு எழுதிய கடிதத்தில், ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன. உபி.யில் பதிவான வாக்குகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.