சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், பிரபல நடிகை பார்வதி நாயர் வசித்து வருகிறார். இவர், ‘என்னை அறிந்தாள், நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில்,, நான் புதிய படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தேன். கடந்த 18ம் தேதி இரவு வீட்டிற்கு வந்தேன். அப்போது, எனது படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதித்த வாட்ச், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு வாட்ச், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன், கேமரா காணவில்லை. எங்கள் வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(30) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார்.