அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் நடிகை நோராவின் வங்கதேச நிகழ்ச்சி ரத்து

டாக்கா: வங்கதேசத்தின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி பங்கேற்கும் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உலகளாவிய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், மத்திய வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, இந்தியாவில் பாலிவுட் நடிகை  நோரா ஃபதேஹி பங்கேற்கும் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.

டாக்காவில் மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில்  நடிகை நோரா ஃபதேஹி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் மேடையில் நடனமாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கதேச நாணயத்திற்கு எதிரான டாலர் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதால்,  நோரா ஃபதேஹி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: