திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்பட்ட புகாரின்படி, பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயசூர்யா. இவர் தமிழில் கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கொச்சி கடவந்திரா பகுதியில் வீடு ஒன்றை கட்டினார். அந்த வீடு ஏரியை ஆக்கிரமித்து கட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கொச்சியை சேர்ந்த கிரீஷ் பாபு, மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.