தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.