டிபனுக்கு பணம் கேட்ட கடைக்காரர்களுக்கு வெட்டு

பெரம்பூர்: ஓட்டேரி செட்டில்மெண்ட் ஏரியா பகுதியை சேர்ந்தவர் தருண் (18), ஓட்டேரி பிரிஸ்லி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (29). இருவரும் ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலை பொடிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கடைக்கு டிபன் சாப்பிட வந்த 3 பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் புறப்பட்டுள்ளனர். கடையில் இருந்த தருண் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தருணை வெட்டியுள்ளார்.

இதில் தருணுக்கு இடது உள்ளங்கை, மணிக்கட்டு மற்றும் முழங்கையில் பலத்தை வெட்டுக்காயம் விழுந்தது. தடுக்க வந்த கடையிலிருந்த பிரசாத்தையும் இடது முழங்கையில் வெட்டிவிட்டு, அவர்கள் தப்பினர். இதில், காயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து வெட்டிவிட்டு தப்பிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: