பீகார் ஐகோர்ட் நீதிபதி போல் நடித்து,வழக்கு விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயன்ற நபர் கைது

பாட்னா: பாட்னா ஐகோர்ட்டின் நீதிபதியைப் போல் நடித்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். பாட்னா ஐகோர்ட்டின் நீதிபதியை போல் நடித்து, போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயன்றதாக கூறப்படும் ஒருவரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட நபர் சமீபத்தில் ஐகோர்ட் நீதிபதி போல் காட்டிக்கொண்டு டிஜிபியை அழைத்து, போலீஸ் அதிகாரி ஆதித்ய குமார் தொடர்பான வழக்கை முடித்து வைக்குமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கேட்டு கொண்டுள்ளளார்.

போலி நீதிபதியின் கூட்டாளிகள் என்று கூறப்படும் மேலும் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி செய்த நபரிடம் இருந்து ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் பல போலி சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: