திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமத்தினரால் கட்டப்பட்டு வரும் துறைமுகப் பணிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி மீனவர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் துறைமுகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அதானி குழுமம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.