சண்டிகர்: பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு துறை ஏஐஜி.க்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சுந்தர்சாம் அரோரா கைது செய்யப்பட்டார். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் சுந்தர் சாம் அரோரா. இவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கடந்த ஜூனில் பாஜ.வில் இணைந்தார். இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது, அமைச்சராக இருந்தபோது தொழில்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.