பெங்களூரு: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட, திரவ கழிவு மேலாண்மையை சீராக மேற்கொள்ள தவறிய கர்நாடகா அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 15வது பிரிவின் கீழ், கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட, திரவ கழிவு மேலாண்மை கண்காணிக்கப்பட்டு வந்தது. அதில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை இம்மாநில அரசு ஒழுங்காக பின்பற்றாமல் இருந்தது கண்டறியப்பட்டது. திட, திரவ கழிவுநீரை மறுசுழற்சி செய்யாமல் கடந்த 8 ஆண்டுகளாக அலட்சியம் காட்டி உள்ளது.