சிட்னி: ஆஸ்திரேலியாவில் பணம் கேட்டு மிரட்டி இந்திய மாணவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்தவர் சுபம் கர்க். ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி இரவு, சிட்னி நகரின் பசிபிக் ஹைவே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரிடம் பணம், செல்போனை கேட்டு ஒருவர் மிரட்டினார். அவற்றை சுபம் மறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், சுபத்தை திடீரென கத்தியால் சரமாரியாக குத்தினார். முகம், நெஞ்சு, வயிற்று பகுதியில் கத்திக்குத்து விழுந்தது.