அசாம் முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

புதுடெல்லி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா(53), வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும்போது இதுவரை ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவரின் பாதுகாப்பு குறித்த மறுஆய்வுக்கு பின் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பாக உயர்த்தி வழங்குவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அவருக்கு இனி இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது.

Related Stories: