சென்னை: போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதைவிடுத்து பணி நீக்கம் செய்வதாக மிரட்டக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிலைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார்.