புதுடெல்லி: காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பு விவகாரம் தொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளதால், ஒன்றிய அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பானது தனிநாடு கோரியும், இந்தியாவுக்கு எதிராக சதிவேலைகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவுக்கு எதிராக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வௌிநாட்டில் பதுங்கியிருக்கும் குர்பத்வந்த் சிங்குக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதற்காக ஒன்றிய அரசின் தரப்பில் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.