தூங்கிக் கொண்டிருக்கும் போதே ஆஸ்கார் விருது நடிகை மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி காலமானார். அமெரிக்காவில் கடந்த 1984 முதல் 1996ம் ஆண்டு வரை தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘மர்டர், ஷி ரைட்‘ என்ற தொடரில் நடித்து ெபரும் புகழ் பெற்ற நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி (97) என்பவர் வயது மூப்பின் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காலமானார். இவரது பிறந்த நாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அவரது மறைவு குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமின்றி 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் ஆறு கோல்டன் குளோப்ஸ், ஐந்து டோனி விருதுகள், ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.  ‘மர்டர், ஷி ரைட்‘ என்ற தொலைகாட்சி தொடரானது 264 எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு எபிசோட்டுக்கும் 3,00,000 டாலர் வரை ஏஞ்சலா லான்ஸ்பரி சம்பாதித்தார். இவரது தாத்தா ஜார்ஜ் லான்ஸ்பரி 1930ம் ஆண்டுகளில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தார். அவரது தாயார் மொய்னா மேக் என்பவர் நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: