ஆம்பூரில் போலீஸ் சோதனை டிராக்டரில் மணல் கடத்தல் அதிமுக கவுன்சிலருக்கு வலை

ஆம்பூர்:  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பல இடங்களில் மணல் கடத்தல் நடப்பதாக மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் மாலை தனிப்படை போலீசார் ஆம்பூர் எம்.சி. ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக ஒரு டிராக்டர் கன்னிகாபுரத்தில் இருந்து சந்தேகப்படும்படி அதிவேகமாக சென்றது. அந்த டிராக்டரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை ஆம்பூர் டவுன்போலீஸ் நிலையத்தில் டிரைவருடன் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த டிராக்டர் ஆம்பூர் நகராட்சி அதிமுக கவுன்சிலரான ஜெயபாலுக்கு சொந்தமானது எனவும், டிராக்டரை கன்னிகாபுரத்தை சேர்ந்த  ராஜசேகரன்(29) ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவான அதிமுக கவுன்சிலர் ெஜயபாலை தேடி வருகின்றனர்.

Related Stories: