கோவில்பட்டியில் அரசு பஸ்சில் இருந்து உடைந்து கீழே விழுந்த ஸ்டீரிங் பாக்ஸ்-சாலையின் நடுவில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

கோவில்பட்டி : கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து சிவஞானபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. கோவில்பட்டி  மாதங்கோவில் சாலை - மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் பஸ் சென்ற போது திடீரென ஸ்டீரிங் பாக்ஸ் உடைந்து கீழே விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய பஸ், அருகில் உள்ள குறுகிய பாலத்தில் நடுவில் நின்றது. அரசு பஸ் சாலையின் நடுவில் நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தினை சீரமைத்து மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ்சினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் சரி செய்ய முடியவில்லை என்பதால் மாற்று பஸ் மூலமாக பழுதான பஸ்சினை கொண்டு செல்ல முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு நீண்ட இழுபறிக்கு பின்னர் பஸ்சினை அங்கிருந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தினர்.

Related Stories: