சென்னை: கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (49), (மாற்றுத்திறனாளி). இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் அன்பு தென்னரசன் (52) மற்றும் அவரது மகன் சிலம்பரசன் இருவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ₹45 லட்சம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, கேட்ட பணத்தை கொடுத்த ஜெயராமனுக்கு போலி ரசீதை வழங்கி உள்ளனர்.
இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த ஜெயராமன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாக கூறப்படுகிறது.