வாஷிங்டன்: ‘எந்த நாட்டில் இருந்தும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்,’ என்று ஒன்றிய பெட்ரோலியஅமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால், தனது கச்சா எண்ணெய்யை நட்பு நாடுகளுக்கு குறைந்த விலைக்கு விற்க ரஷ்யா முன்வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ‘எங்கள் நாட்டு மக்களின் நலனே முக்கியம்’ என ஒன்றிய அரசு பதிலடி கொடுத்தது.