தாம்பரம்: தாம்பரம் அருகே காப்புக்காட்டில் கூண்டு வைத்து, ஆசிய மரநாய் பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் வனத்துறைக்குட்பட்ட மறைமலைநகர், கூடலூர் காப்புக்காடு பகுதியில் தாம்பரம் வனத்துறை ரேஞ்சர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் வழக்கம்போல கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கையில் சிறிய கூண்டோடு ஒரு நபர் தனியாக வந்துள்ளார். அவர், வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் தப்பிக்க முயற்சித்தபோது, அவரை மடக்கி பிடித்த வனத்துறையினர், அவர் வைத்திருந்த கூண்டை சோதனை செய்தனர். அப்போது, அதில் அரிய வகையான ஆசிய மரநாய் இருந்தது தெரியவந்தது.