அம்பத்தூர்: அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (38, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் தனது 13 வயது மகளை காணவில்லை, என அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (22) என்பவர், சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து, செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்காணித்தபோது, புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு வீட்டில் சஞ்சயுடன் சிறுமி தங்கி இருப்பது தெரிந்தது. நேற்று அங்கு சென்ற போலீசார், இருவரையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.