வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வனச்சரக பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ பற்றியது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தாணிப்பாறைக்கு மேற்கே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில், வல்லாளம் பாறை பகுதியில் திடீரென காட்டு தீ பற்றியது. தீ மளமளவேன மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு இடத்திற்கு தப்பி ஓடின. மேலும் தீயால் பலவகை அரிய மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின.