சிவகங்கை: சிவகங்கை, சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதுடன் இலங்கையில் பயிற்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வீட்டில் இன்று அதிகாலை வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது உள்ளூர் காவல் துறையினரும் உடனிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதேபோல சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவார பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.