கீவ்: உக்ரைனின் ஜபோர்ஜியாவில் அணுமின் நிலையத்தின் அருகே ரஷ்யா அடுத்தடுத்து ஏவிய 7 ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், 8வது மாதமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய லுஹான்க்ஸ் உள்ளிட்ட 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக இருதினங்களுக்கு முன் புடின் அறிவித்தார். இதை அங்கீகரிக்க மாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா சட்ட விரோதமாக இணைத்த பகுதியில் அமைந்துள்ள 3 முக்கிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டு இருப்பதாக, இந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அறிவித்தார்.