புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

வடமதுரை: அய்யலூரில் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை,  அய்யலூரை சுற்றி ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் அய்யலூர் வந்து  செல்கின்றனர். இதனால் அய்யலூர் பகுதி அதிகாலை முதல் இரவு வரை எப்போதும்  பரபரப்பாக காணப்படும். இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கு செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்ைல.

இதனால் புறக்காவல் நிலையத்தின் பின்புற பகுதி சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ளது. இதனால்  பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து செல்ல வேண்டியது உள்ளது. மேலும் புறக்காவல் நிலையம் பயன்பாடின்றி உள்ளதால் விஷஜந்துக்கள் அதற்குள் தஞ்சமடைந்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘‘இப்பகுதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டால் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கலாம். பொதுமக்கள் நலன் கருதி, இந்த புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும்’’  என்றனர்.

Related Stories: