வடமதுரை: அய்யலூரில் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் அய்யலூர் வந்து செல்கின்றனர். இதனால் அய்யலூர் பகுதி அதிகாலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கு செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்ைல.