ரசென்னை: பிரபல கிரிக்கெட் வீரர்கள் இணைந்து சென்னையில் புதிதாக கிரிக்கெட் பயிற்சி அகடமியை தொடங்குகின்றனர். இது குறித்து முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளருமான பரத் அருண் கூறியதாவது: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோருடன் இணைந்து புதிதாக கிரிக்கெட் பயிற்சி அகடமியை தொடங்க உள்ளோம். சென்னையில் அக். 6ம் தேதி தொடங்க உள்ள இந்த அகடமி ஒரு முன்மாதிரி பயிற்சி மையாக இருக்கும். நாங்கள் மூவரும் இந்திய அணியின் பயிற்சிக் குழுவில் இருந்ததால் அகடமியில் வழங்கும் பயிற்சியும் சர்வதேச தரத்தில் இருக்கும்.