குற்றவாளிகளை கைது செய்ய கோரி தற்கொலை செய்த பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு: புதுகை அருகே பரபரப்பு

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், இவரது மனைவி கோகிலா(35). இவருக்கும், பக்கத்தில் வீட்டை சேர்ந்த கண்ணையா என்பவருக்கும் வீட்டு பாதை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து கீரமங்கலம் போலீசில் கண்ணையா புகார் செய்தார். அதன்பேரில் கோகிலாவை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் நிபந்தனை ஜாமீன் பெற்று தினம்ேதாறும் காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டு வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் கோகிலா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் எனது சாவுக்கு காரணம் மேற்பனைக்காடு குமார், அவரது மனைவியும் போலீசுமான புவனேஸ்வரி மற்றும் என்னை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் இழுத்து சென்று சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த கீரமங்கலம் போலீஸ் நிலைய எஸ்ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி ஆகியோர் தான் என்று எழுதியிருந்தார்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி கோகிலாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்னைக்குரிய வீட்டு பாதை அகற்றப்பட்டது. இதைதொடர்ந்து கீரமங்கலம் போலீசில் கோகிலாவின் கணவர் நீலகண்டன் புகார் செய்தார். இதையடுத்து  எஸ்ஐ ஜெயக்குமார், குமார் உட்பட 6 பேர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கோகிலாவின் உறவினர்கள் அறந்தாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோகிலா உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்பு கொண்டனர். ஆனால் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். இதன்பிறகு பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசாரும், அதிகாரிகளும் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: