குளித்தலை: குளித்தலை அருகே இரும்பூதிபட்டி முகாமில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விஏஓவை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் அகதிகள் முகாமில் ஒரு பெண் தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அகதிகள் முகாமில் வீட்டில் பகலில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்தார். அப்போது கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலரான, அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தை சேர்ந்த அன்புராஜ் (36), முகாமில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.