உளுந்தூர்பேட்டை: சென்னை மணலியில் இருந்து 40 டன் பாமாயில் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகேசன் (48) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி என்ற இடம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி சென்ற டிரைவர் முருகேசன் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். லாரியிலிருந்து வெளியேறிய பாமாயிலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாளி மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர்.