ராமஜெயம் கொலை வழக்கு: 4 பேரிடம் விசாரணை

திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் உள்பட 4 பேரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 29-3-2012ல் அதிகாலை நடைப்பயிற்சி  சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது இந்த கொலை வழக்கை  சிறப்பு புலனாய்வு தனிப்படை எஸ்பி ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி மதன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் உள்பட 4 பேரை நேற்றிரவு சிறப்பு தனிப்படை போலீசார் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து டிஎஸ்பி மதன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: