அண்ணாநகர்: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவவிநாயகம் (41), பிரபல கொள்ளையன். இவர், மீது விருகம்பாக்கம் நொளம்பூர் உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 7க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குள் நிலுவையில் உள்ளன. விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய வழக்கில் கடந்த 4ம் தேதி, விருகம்பாக்கம் போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
