சென்னை: இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ்.வி. ரமணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் எஸ்.வி. ரமணன். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்திய இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு தனது குரல் மூலம் அழகு சேர்த்துள்ளார். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவண படங்களை தயாரித்த இவர், ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றிய ஆவணப் படங்கள் இயக்கி, பெரும் வரவேற்பை பெற்றார்.