குடியாத்தம் : குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் 2 மான்களை வேட்டையாடி இறைச்சியாக்கியவரை வனத்துறையினர் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த கணவாய் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்(38). கல்லப்பாடி கிராமத்தில் தனியார் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். தண்ணீர் தேடி விவசாயம் நிலம் பக்கம் வழி தவறி வரும் மான்களை வேட்டையாடி விற்பனை செய்வதாக குடியாத்தம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று குடியாத்தம் வனத்துறையினர் விவசாய நிலத்தில் சோதனை செய்தனர்.